திருமண நிகழ்வில் கலந்து கொள்ள 50 பேருக்கு மாத்திரம் அனுமதி!

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு திருமண நிகழ்வுகள், மரண நிகழ்வுகள் மற்றும் இரவு களியாட்ட விடுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க திருமண நிகழ்வொன்றில் 150 பேர் பங்குபற்றலாம் என்ற நிலை மாற்றப்பட்டு தற்போது 50 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மரண வீடுகளில் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இரவு களியாட்ட விடுதிகளுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும்
தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை முக்கியஸ்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை யடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் அதிகரிப்பை கருத்திற்கொண்டே தளர்த்தப்பட்டிருந்த மேற்படி நடைமுறைகளை மீண்டும் கடுமையாக்கு வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பான சுகாதாரத் துறையின் வழிகாட்டல் நேற்று வெளியிட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.