இலங்கையில் புதிய அத்தியாயத்தை மஹிந்த ஆரம்பித்தார் விமல் பல்டி!
” மஹிந்த ராஜபக்ச 2005 இல் ஜனாதிபதியான பின்னரே இலங்கை புதிய அத்தியாயத்தை நோக்கி பயணித்தது.
போரை முடிவுக்கு கொண்டுவந்தார். சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது. துறைமுக நகரை அமைத்து, இலங்கைக்கு புதிதாக ஒரு பகுதியை இணைத்தார். பொருளாதாரத்திலும் புரட்சிகளை செய்தார்.”
இவ்வாறு அமைச்சர் விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
மேட் இன் ஸ்ரீலங்கா (Made in Sri Lanka) வர்த்தக கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.