இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டவர்களில் 23 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என துணை சுகாதாரத்துறை செயலாளர் மனோகர் அக்னானி தகவல் தெரிவித்துள்ளார். 60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.