மக்கள் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம் மாநகரை இன்று பிற்பகல் வந்தடைந்தது.

இதையடுத்து, பேரெழுச்சிப் பேரணி தற்போது யாழ்ப்பாணம் நகர மையப் பகுதிக்குள் சென்றுள்ளதுடன் அங்கு நடை பவனி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, யாழ். பல்கலைக்கழகம் சென்று, நல்லூர் கோயில், தியாகி திலீபன் நினைவிடம் சென்று பருத்தித்துறை வீதி வழியாக கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி, வல்லைவெளி, புறாபொறுக்கி சந்தி, கரணவாய், நெல்லியடி, மாலுசந்தி, மந்திகை, பருத்தித்துறை, திக்கம், அல்வாய், வதிரிச்சந்தி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை தீருவில் வெளி, வல்வெட்டித்துறை நகரம், நெடியகாடு ஊடாக பொலிகண்டியைச் சென்றடையவுள்ளது.

இதேவேளை, இந்தப் பேரணியில் யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளதுடன் பேரணி பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொலிஸாரின் தடைகளையும் மீறி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *