போலி விசா மூலம் ஜேர்மன் செல்ல முயன்ற மூவர் கைது!

போலி ஜேர்மன் விசாக்களைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டுக்காக மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் வசிக்கும் 34 வயதான தாயொருவரும், அவரது ஒன்பது வயதுடைய மகனும், வவுனியா பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய மேலும் ஒரு நபருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

ஈ.கே.-651 என்ற எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் மூலம் துபாய் நோக்கி புறப்பட முற்படுகையிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதான மூவரம் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *