தமிழர்கள் பொலித்தீன் பைகளைப் போன்று கசங்கிவிட்டார்கள்!

தனிநாட்டை உருவாக்க வேண்டுமென்ற மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த தைரியத்துடன் தமிழ் மக்களாகிய நாம் போராடிய போதிலும் இறுதியில் தோல்வியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழர்கள் பொலித்தீன் பைகளைப் போன்று கசங்கிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச அமைப்பாளர் கே. பிரனாநிதி தலைமையில், மட்டக்களப்பு – பங்குடாவெளி பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சாத்தியமான அரசியலையே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி முன்வைத்துள்ளது.

மக்களை உசுப்பேற்றி கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, ஜனநாயக வழியில் பேச்சுவார்த்தை மூலமாக எமது கோரிக்கைகளை வென்றடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *