கொரோனா தொற்று 65 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 330 ஆக அதிகரிப்பு!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 715 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 698 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 6 ஆயிரத்து 332 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.