கோர விபத்து கணவன் மற்றும் மனைவி பலி!

எல்பிடிய, அவித்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். 

பேருந்தொன்று முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய பின்னர் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமைந்த முன்னால் வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் எல்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். 

50 வயது ஆண் ஒருவரும் 47 வயதுடைய அவரது மனைவி ஆகியோரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *