கொரோனாவின் தாக்கம் மக்களிடம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது!

கொரோனாவின் தாக்கம் மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களின் மனோநிலையில் கொரோனா எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் அளித்திருக்கும் விளக்கம்!

கொரோனா, பெண்களிடம் எத்தகைய மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
கொரோனாவால் பெண்களிடம்தான் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. வருமானம் குறைந்துவிட்டதால் எதிர்காலத்தை பற்றிய கவலை. பள்ளி, கல்லூரிகள் மூடிக்கிடப்பதால் பிள்ளைகளின் கல்வியை பற்றிய அச்சம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் எழும் சிக்கல் போன்ற அனைத்தும் சேர்ந்து பெண்களை அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனால் அது தேவையற்றது.

கோபத்திற்கும் – கொரோனாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

கொரோனா சிகிச்சைக்கு உள்ளாகியிருப்பவர்களில் 58 சதவீதம் பேர் அதிகமாக கோபம்கொள்ளும் வழக்கம்கொண்டவர்கள் என்பது ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. கொரோனா பாதித்தவர்களின் சுபாவத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ‘பாசிட்டிவ்’ ஆனவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் சுபாவங்களிலும் மாற்றம் உருவாகியுள்ளது. சில மாதங்கள் கழித்துதான் அவர்கள் அந்த நிலையில் இருந்து மாறி இயல்புக்கு வருகிறார்கள்.

முழுமையான இலவச சிகிச்சை மற்றும் எளிதாக குணமடையும் சூழ்நிலை இருந்தும் கொரோனா பாதித்த ஒருசிலர் தற்கொலை செய்துகொள்வது ஏன்?

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இதுவரை முழுநிலையில் தயாராகவில்லை. நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் நோய் பாதித்தவர்களில் சிலர் பெரும் அச்சம் கொள்கிறார்கள். இப்போது பயத்தில் இருந்து அனைவரும் அகலவேண்டும். கொரோனா வந்தாலும் அதில் இருந்து மீளமுடியும் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்பிக்கை கொண்டால் தற்கொலை எண்ணம் தோன்றாது. நம்பிக்கைதான் வாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *