கொரோனா தொற்று 60 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரித்தது!
இலங்கையில் இன்று 772 பேருக்கு கொரோனா மொத்த தொற்றுக்கு உள்ளாகியோரின் எண்ணிக்கை 60694 ஆக அதிகரித்துள்ளது மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கோனபொல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.