இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் திடீர் இராஜினாமா!
ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து அசந்த டி மெல் விலகியுள்ளார்.
முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அண்மையில் அறிவித்திருந்தார்.
எனினும், ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்தும் தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஶ்ரீலங்கா கிரிக்கெட்டில் இடைக்காலக் குழுவொன்றை நியமிக்க தற்போதைய நிலையில் தான் தயாராக இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.