தொற்றுள்ள மாணவி வகுப்பு வந்ததால் பலர் தனிமைப்படுத்தலில்!
குருநாகல் நிக்கவெரட்படிய நகருக்கு மிக அருகே உள்ள பாடசாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மாணவியொருவர் வகுப்பிற்கு சமூகமயளித்ததால் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி அந்த பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் என 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த மாணவி கற்றுவரும் 10ஆம் தர வகுப்பும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.