குடியரசு தினத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் பேரணி!

இந்தியாவின் – டெல்லியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களைக் கொண்டு விவசாயிகளால் பாரிய எதிர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண்மை சட்டத்தை எதிர்த்தும், அதானி உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  டெல்லியில் இன்றைய தினம் உழவு இயந்திரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட பேரணியில், பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொலிஸாருன் மேற்கொள்ளப்பட்ட சுமுகமான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் பொலிஸாரின் வாகனங்களை முற்றுகையிட்டுள்ளனர்.

இதனையடுத்து,  நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *