இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அபாய நிலையில்!

உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 வீதமானது 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித அளுத்கே கூறினார்.

இந்த நேர்மறை வீதமானது ஒரு மாதத்துக்கு முன் 3.0 மட்டத்தில் இருந்தது. பின்பு 4ஆம் மட்டத்துக்கு அதிகரித்தது.இப்போது 5ஆம் மட்டத்தைக் கடந்து 5.5 அளவில் உள்ளது. இது அதிக அபாயமான நிலையாகும் என அவர் கூறினார்.

எவ்வாறாயினும் வைரஸ் இன்னும் சமூகத்திலிருந்து வெளியாக வில்லை என்றும் குணமடைந்த அனைத்து நோயாளர்களும் மினுவாங்கொட மற்றும் பேலியகொடகொத்தணிகளுடன் தொடர்புடையோராவர் என்றும் தொற்று நோயியல் பிரிவு கூறுகிறது.

ஆனால் அண்மைய தொற்றுக்கள் மேற்படி இரு கொத்தணிகளுடனும் தொடர்பற்றவை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *