சசிகலாவுடன் சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா!
பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால் விக்டோரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சளி மாதிரியை சிறை மருத்துவ குழுவினர் எடுத்து, பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர், சசிகலாவுடன் தொடர்பில் இருந்த பெண் வார்டன்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களின் பரிசோதனை முடிவு இன்று வெளியிடப்பட்டது. அதில் பெங்களூரு சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இளவரசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவரையும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க பெங்களூரு சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது