உணவு கொடுக்காமல் தந்தை மரணம் தாய்க்கு சிகிச்சை மகன் மீது வழக்குப் பதிவு!
கேரள மாநிலம் கோட்டயத்தில் வயதான பெற்றோரை தனி அறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த மகன் மீது பொலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் உணவு கிடைக்காததால் தந்தை இறந்தார். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மினி (76). இந்த தம்பதி தங்களது இளைய மகன் ரெஜியின் வீட்டில் வசித்தனர். ரெஜி கூலி வேலை செய்கிறார். இதற்கிடையே அவர் தனது வயதான பெற்றோருக்கு உணவு கொடுக்காமல், இருவரையும் வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.