இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கரிசனை!
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த தனது கரிசனையை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அதிகாரிகளிடம் தெரிவிக்கவுள்ளது.
இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள இரு நாடுகளினதும் கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த தங்கள் கரிசனையை வெளியிடவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்பல்கலைகழக நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை குறித்து டுவிட்டர் செய்தியில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பிலும் அனைவரையும் உள்வாங்குதல் நல்லிணக்கம் சிறுபான்மையினரை நியாயமாக நடத்துதல் போன்றவற்றிற்கு ஆதரவளிப்பதற்காகவும் எதிர்வரும் சந்திப்பின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடனான ஈடுபாட்டை அதிகரிக்கவுள்ளது என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.