GMOA தலைவர் சுயதனிமைப்படுத்தலில்!
தற்போது நான் எனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் உள்ளேன் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் Dr.அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார்.
அவரின் வீட்டில் கடந்த தினம் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பாதெணிய தொற்றாளருடன் நெருங்கிப்பழகியவராக அடையாளம் காணப்பட்டார்.
அதன்படி, அவரை தனிமைப்படுத்துவதற்காக அவரின் வீட்டிற்கு பொது சுகாதார பரிசோதகர் சென்ற போதும் வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.