தனிமைப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற கொத்தணியில் இதுவரை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ரஊப் ஹக்கீம் எம்.பி., அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்புடைய பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.