இலங்கையில் இன்று 521 பேருக்கு கொரோனா இருவர் உயிரிழப்பு!
நாட்டில் மேலும் 269 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 521 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 23 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 42 ஆயிரத்து 498 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தெஹிவளை பகுதிகளைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவரும், அலவ்வ பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.