EPF வழங்காத முதலாளிகளுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை!
ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) வழங்குவதற்கு தவறியுள்ள முதலாளிமாருக்கு இந்த வருடம் எவ்வித மன்னிப்புகளையும் வழங்கப் போவதில்லை என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றினூடாக தொழில் அமைச்சு சிவப்பு எண்ணிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
சுமார் 12 பில்லியன் ரூபா ஊழியர் சேமபால நிதி வழங்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக 16000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.