பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?

பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை பிறப்பிக்க இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இன்று (22) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதுவரையில் தனிமைப்படுத்தப்படாது பகுதிகளில் தேவை ஏற்படாத சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்து சுகாதார பிரிவினர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியின் அறிவுரையின் அடிப்படையில் இப்போது போக்குவரத்து கட்டுபாடுகள் விதிக்க வேண்டிய தேவையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *