வேகமாகப் பரவி வரும் புது கொரோனாவால் விமானங்களுக்குத் தடை!

வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா தீநுண்மி பிரிட்டனில் பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு நெதா்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜொ்மனியும் பிரான்ஸும் பரிசீலித்து வருகின்றன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கரோனா தீநுண்மியின் புதிய ரகமொன்று அண்மையில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது. அந்தப் புதிய ரகத் தீநுண்மி, முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனிலிருந்து நெதா்லாந்து வந்த ஒருவரது உடலில் புதிய ரக கரோனா தீநுண்மி தொற்றியிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனா்.

அதனைத் தொடா்ந்து, பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் நெதா்லாந்து தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை அந்தத் தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக தீவிரத் தன்மை கொண்ட புதிய ரக கரோனா தீநுண்மி பிரிட்டனிலிருந்து இறக்குமதியாவதைத் தடுக்கவும் அதன் மூலம் தங்கள் நாட்டில் கரோனா பரவல் தீவிரமெடுப்பதைத் தவிா்க்கவும் இந்தத் தடை விதிக்கப்படுவதாத நெதா்லாந்து தெரிவித்துள்ளது.

புதிய ரக கரோனா தீநுண்மி பிரிட்டனிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுடன் ஆலோசித்து வருவதாக நெதா்லாந்து கூறியுள்ளது.
பெல்ஜியம்: மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் அலெக்ஸாண்டா் டிக்ரூ கூறுகையில், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான அவகாசத்தைப் பெறுவதற்காக, பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 24 மணி நேரம் அமலில் இருக்கும்.

அந்தத் தடையை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தாா்.

ஜொ்மனி: பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாகத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஜொ்மனியும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் புதிய ரக கரனோ தீநுண்மி பரவும் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அந்தத் தீநுண்மி தொடா்பான தகவல்களை ஆய்வு செய்து வருவதாகவும் ஜொ்மனி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரான்ஸ்: பிரிட்டன் விமானங்களுக்குத் தடை விதிப்பது குறித்து பிரான்ஸ் அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரெஞ்சு தொலைக்காட்சியான பிஎஃப்எம்டிவி தெரிவித்தது.

இதுதொடா்பான அறிவிப்பை பிரான்ஸ் அரசு விரைவில் வெளியிடும் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கடுமையானது கொரோனா கட்டுப்பாடுகள்

தீவிரத் தன்மை கொண்ட புதிய ரக கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, பிரிட்டன் தலைநகா் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் நோய் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கூறியதாவது:

வேகமாகப் பரவி வரும் புதிய ரக கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய ரகத்தைவிட இந்த புதிய ரக தீநுண்மி 70 சதவீதம் அதிக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. பிரிட்டனில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தீவிரமடைந்ததற்கு இந்தத் தீநுண்மி காரணமாக இருக்கலாம்.

முந்தைய தீநுண்மையை விட புதிய ரக கரோனா தீநுண்மி உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கோ, நோய் பாதிப்பை அதிகரிக்க்கும் என்பதற்கோ ஆதாரங்கள் இல்லை என்றாா் அவா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *