நடிகை சித்ரா கடைசியாக மாமனாரிடம் பேசிய குரல் பதிவு வெளியானது!

ரிவி நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சித்ராவின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை அழைத்து வந்து இன்று ஆர்.டி.ஓ. விசாரணை செய்ய உள்ளார்.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்றபோது சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் காதல் மலர்ந்து பதிவு திருமணமும் நடைபெற்றது.

சீரியலில் முல்லை – கதிராக ஜோடிகட்டிய சித்ராவும், குமரனும் நடன திறமையை காட்டுவதற்காக காட்டிய நெருக்கம் அவர்களுக்குள் இறுக்கமாகி விடுமோ என்று சந்தேகம் கொண்ட ஹேம்நாத் சித்ராவை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார்.
மேலும் அது போன்று நெருக்கமான காட்சிகளில் தொடர்ந்து நடிக்கக் கூடாது என்று சித்ராவிடம் ஹேம்நாத் கூறி சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் தான் ஹேம்நாத்துக்கு ஷாக் கொடுக்கும் விதமாக கதிர் முல்லைக்கு பல நெருக்கமான காட்சிகள் சீரியலில் இடம்பெற்று உள்ளது.

இதற்கிடையே சித்ராவுக்கும் ஹேம் நாத்துக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பதிவு திருமணம் செய்து கொண்ட பின்னர் சித்ராவின் சீரியல் வாழ்வில் அதிகமாக தலையிட்டுள்ளார் ஹேம்நாத்.

ஏற்கனவே வீடு கட்ட வாங்கிய கடன், கடனில் வாங்கிய ஆடிக்கார் என பல கடன்களும் கழுத்தை இறுக்கிய நிலையில் கணவன் ஹேம்நாத்தின் டார்ச்சர் எல்லை மீறியுள்ளது. ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க வேண்டாம் என்று தடை போடும் நிலைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து மாமனார் ரவிச்சந்திரனிடம் செல்போனில் பேசிய சித்ரா, இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஹேம்நாத் செய்யும் டார்ச்சர்கள் குறித்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

சித்ரா ஹேம்நாத்தின் தந்தையிடம், ஹேம்நாத் தன்னை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தும் விஷயத்தை செல்போனில் கூறி வந்துள்ளார். இந்த குரல் பதிவு சித்ராவின் செல்போனில் பதிவாகி இருந்த நிலையில் ஹேம்நாத் அதனை அழித்தது சைபர் குற்ற பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ரெகவரி சாப்ட்வேர் மூலம், அவர் பேசிய குரல் பதிவுகளை மீட்ட காவல்துறையினர் அந்த குரல் பதிவில் சித்ரா தனது மாமனாரிடம் தெரிவித்த புகார்களை ஆதாரமாக கொண்டு ஹேம்நாத்தை கைது செய்ததாக தெரிவித்தனர்.

ஹேம்நாத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் ஹேம்நாத் கொடுத்த தொல்லைகள் குறித்து அவருடன் பணியாற்றிய நண்பர்களிடம் சித்ரா தெரிவித்ததாக கூறப்படுவதால் தற்போது நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

அவர்களை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்ப்பதற்கு காவல்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேம்நாத்தை ஆர்.டி.ஓ விசாரணைக்காக அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *