பேருவளை ரயில் நிலையத்திற்குப் பூட்டு!
கொவிட் 19 தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்ட காரணத்தால் பேருவளை ரயில் நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்படும் நிலையில் பயணச்சீட்டு விநியோகித்தல் மற்றும் சோதனையிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பேருவளை ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கண்டி பொது வைத்தியசாலையின் மற்றுமொரு கொவிட்19 தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்ணான்டோ தெரிவித்தார்.