கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 154ஆக அதிகரிப்பு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆவது அலைமூலம் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, நாட்டில் இன்று மாத்திரம் 685 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 24 ஆயிரத்து 309 பேர் குணமடைந்துள்ளனர்.