அக்காவுடன் நிச்சயதார்த்தம் தங்கையுடன் திருமணம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளபுதுக்கோட்டை விடுதி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜ்குமார் (30).

ராஜ்குமாருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மருங்கபள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் முதல் மகளுக்கும் திருமணம் செய்வதை பேசி முடிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தது.

இதனையடுத்து, இருவருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்துவந்தனர்.
மேலும், அந்த பகுதி முழுவதும் திருமண போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் இருவீட்டாருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமாகிவிட்டதாக பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால், இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் பின் இரண்டு வீட்டாரும் அமர்ந்து பேசி, பெண்ணின் தங்கை ஆசிபாவை(19) ராஜ்குமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.

இதற்கு ஆசிபாவும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் சினிமாவில் நடைபெறும் என்றாலும், நிஜத்திலும் இதுபோன்று நடந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *