கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 335 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பேலியகொடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் 694 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *