பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி பிரிட்டனில் தொடங்கியது. உலக நாடுகளில் முதல் முறையாக, கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம்  என கடந்த புதனன்று இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. உலக சுகாதார ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இதுவாகும். 90 வயது மூதாட்டி மார்கரெட் கீனனுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் முதல் நபர் மார்கரெட் கீனன். இங்கிலாந்தில் கோவன்ட்ரி பல்கலைக்கழக மருத்துவமனையில் மார்கரெட்டுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது. முதற்கட்டமாக இங்கிலாந்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இங்கிலாந்திலோ தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நபர் என்பதில் பெருமை கொள்வதாக மார்கரெட் மகிழ்ச்சி அடைந்தார். இந்த மருந்தை அடுத்த சிலவாரங்களுக்குள் 40 லட்சம் மக்களுக்கு போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *