கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 50  லட்சத்து 75 ஆயிரத்து 137 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 51 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர்  குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *