இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா மருந்தை குடித்துக் காட்டினார் சுகாதார அமைச்சர்!
கொரோனாக்கு சிகிச்சையளிக்க கேகாலையில் உள்ள ஒரு உள்ளூர் ஆயுர்வேத மருத்துவர் உருவாக்கிய மருந்தை பரிசோதிக்கும் பரிசோதனையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நேற்று பங்கேற்றார்.
ஆயுர்வேத மருத்துவர் தம்மிக பண்டார உருவாக்கிய மருந்து குறித்து மேற்கத்திய மருத்துவர்களின் தலையீட்டால் முதற்கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கொரோனா சிகிச்சை மையங்களில் தன்னார்வ நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட பின்னர் நோயாளிகளுக்கு நேர்மறையான விளைவுகள் ஏற்படுத்தியதால், அரசாங்கம் அதன் கவனத்தை மருந்து மீது செலுத்தியுள்ளது.
அமைச்சர் வன்னியராச்சியின் உதவியுடன் பல்வேறு சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.