பிள்ளையான் பிணையில் விடுதலை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (24) பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டுமுதல் சிறைதண்டனை அனுபவித்துவரும் பிள்ளையான், சிறைச்சாலையில் இருந்தே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறி்பபிடத்தக்கது.