வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஒப்புதல் வழங்கும் பணி ஆரம்பம்!
வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஒப்புதல் வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை நாட்டிற்குள் கொண்டுவர நிறுவனங்களுக்கு வழி வகுக்கும் என்று நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகார தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஒழுக்கமான வீட்டுவசதி வழங்குவதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டின் அளவு மதிப்பீடு செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக் குழுவால் குறிப்பிடப்பட்டுள்ள கத்தாருக்கான பயண மற்றும் திரும்பக் கொள்கையின்படி வெளிநாட்டு தொழிலாளர் நுழைவு வழிமுறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது