இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 இலட்சத்தை தாண்டியது!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.33 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 90.95 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக  பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

  • புதிதாக 45,208 பேர் பாதித்துள்ளனர்.
  • இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,95,806 ஆக உயர்ந்தது.
  • புதிதாக 501 பேர் இறந்துள்ளனர்.
  • இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,33,227 ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 43,493 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 85,21,617 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,40,962  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • குணமடைந்தோர் விகிதம் 93.69% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது.
  • சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.85% ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் ஒரே நாளில் 10,75,326 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
  • இதுவரை 13,17,33,134 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *