கொரோனா தொற்று கழிவுநீர் அமைப்பில் இருக்கக்கூடும்!

கொரோனா வைரஸ் தொற்று கழிவுநீர் அமைப்பில் இருக்கக்கூடும் என்று தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸின் நடத்தை இன்னும் ஆய்வில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“வைரஸ் இருப்பதை மருத்துவ சமூகம் ஏற்கனவே அறிந்திருக்கிறது, குறிப்பாக கழிவுநீர் அமைப்பில், இது ஒரு வகையில் நீர் அமைப்பில் சேர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், வைரஸின் நடத்தை இன்னும் ஆய்வில் உள்ளது, எனவே இன்று கூறப்படுவது புதிய ஆதாரங்களுடன் நாளை மாறக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிக்குழு மறு ஆய்வுக் கூட்டம் இன்று (18) அமைச்சில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *