கடற்கரையில் பின்லாடன் முகம் கொண்ட அபூர்வச் சிப்பி கண்டுபிடிப்பு!

சசெக்ஸ் நகரத்தை அண்டிய விஞ்செல்சீ கடற்கரைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் உருவம் போன்ற கடற்சிப்பியை கண்டெடுத்த பெண் ஒருவர் அதனை ஆச்சரியத்துடன் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அழகிய கடற்கரைகளைக் கொண்ட கிழக்கு சசெக்ஸ் நகரத்திற்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம்.

அந்த வகையில், மேற்கு லண்டனின் பிரென்ற்ஃபேர்ட் (Brentford) நகரைச் சேர்ந்த டெப்ரா ஒலிவர் என்பவர், தனது 42 வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள விஞ்செல்சீ கடற்கரைக்கு தனது கணவருடன் சென்றிருந்தார்.

கடற்கரையில் கிடந்த சங்குகளையும், சிறு சிறு சிப்பிகளையும் வேடிக்கைபார்த்த வண்ணம் டெப்ரா ஒலிவர் உலாவிக் கொண்டிருந்த தருணத்தில், மனித முகம் போன்று இருந்த சிப்பி ஒன்றைக் கண்டெடுத்துள்ளார்.

அது ஏறக்குறைய அல்கைடா தலைவர் ஒசாமா பின்லாடனைப் போலவே இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கோடிக்கணக்கான சிப்பிகள் கடற்கரையில் கிடந்தன. கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்த போது திடீரென மனித முகம் போன்று உருவம் கொண்ட சிப்பி எனது கவனத்தை ஈர்த்தது.

பின்பு அதை கையில் எடுத்து உன்னிப்பாக அவதானித்த போது, ஒசாமா பின்லாடனைப் போன்று தோற்றமளித்தது. அதை ஒரு நினைவுப்பொருளாக எடுத்து வந்தேன். பின்லாடனின் உடல் கூட கடலில் தான் வீசப்பட்டது என்று குறிப்பிட்டார்.

இந்தப் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *