இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவானது!

இலங்கையில் இன்றைய தினம் மேலும் 03 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி,

(1) கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதான பெண். கொரோனா நோய்த் தொற்று தொடர்பில் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

(2) கந்தானை பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண். தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தார்.

(3) கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண். தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 69 ஆக பதிவாகியது.

அதேநேரம் இன்றைய தினம் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 233 ஆக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *