கொழும்பில் உள்ள விலைமாதுகள் தனிமைப்படுத்தலில்!

தலைநகர் கொழும்பு  உட்பட அதனை அண்டிய நகர்ப்பகுதிகளில் நடமாடும் விபச்சாரிகளால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் இதனால் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே சுய தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் பல தடவைகள் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும், மீண்டும் அத்தொழிலிலேயே ஈடுபட்டுவருகின்றனர் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுவருகின்றன.எனினும், குறித்த சட்டவிதிமுறைகளைமீறி கொழும்பு, மருதானை, தெஹிவளை மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளில் நடமாடும் விலைமாதுகள் திரிகின்றனர் என தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களால் ஏதேனுமொரு விதத்தல் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாலேயே அவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கொழும்பில் ‘சிக்னல் லைட்’டில் வாகனங்கள் நிறுத்தப்படும்போது யாசகம் பெறுபவர்களையும் கைது செய்து தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *