கொரோனா தடுப்பூசி 95% பலனளிப்பதாக ஆய்வில் தகவல்!

கொரோனா நோய்க்கு எதிராக 95% வினைத்திறனாக செயலாற்றக்கூடிய தடுப்பூசியை தயாரித்திருப்பதாக, அமெரிக்காவின் மொடெர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன் ஆரம்பட்ட ஆய்வு முடிவுகள் சிறப்பாக வந்துள்ளன.

இதன் ஊடாக கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பைசர் நிறுவனம் அறிவித்திருந்த தடுப்பூசியும் 90% வினைத்திறன் கொண்டது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோரி விண்ணப்பிக்கவிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *