கொழும்பில் 10 % வீதமானோருக்கு கொரோனா தொற்று?
கொழும்பில் 10 % வீதமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் ; பொது சுகாதார பரிசோதர்கள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது…!
கொழும்பில் 10 % வீதமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி இருக்கலாம் என அச்சம் வெளியிடப்படும் நிலையில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபை எல்லையில் 30,00 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாமென கொழும்பு மாநகர சபை பிரதான வைத்திய அதிகாரி ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.