முஸ்லிம்களின் புனிதபூமி ஜெரூசலம் என்பது உறுதியாகிறது!
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் பகுதியில் தொடர்ச்சியாக இஸ்ரேலிய தொள்பொருளியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஒன்றின் போது, இஸ்லாமிய ஆட்சி காலப்பகுதிக்கு சொந்தமான 1000 வருடங்கள் பழமைவாய்ந்த தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜெரூஸலம் உட்பட்ட பலஸ்தீனப் பிரதேசம் இஸ்ரேலுக்கு சொந்தமானது என்று நிரூபிப்பதற்காக வேண்டி, ஜெரூசலம் பகுதியில் இஸ்ரேலிய தொள்பொருளியலாளர்களால் பல
அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த போதிலும் அதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீனில் அமைந்துள்ள ஜெரூசலம் பிரதேசம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பதுடன், ஜெரூசலம் பற்றி புனித அல்குர்ஆனிலும் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது.