கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்களுள் ஒருவர் கிரான்பாஸ் பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புத்தளம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

ரத்மலான பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 64 மற்றும் 78 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *