இலங்கையில் 42 ஆவது கொரோனா மரணம் பதிவானது!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பானதுறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கும்வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என கூறப்படுகின்றது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 11 நாட்களில் மாத்திரம் 22 மரணங்கள் பதிவாகியுள்ளன