கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்குப் பூட்டு
கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.