நடிகர் அமீர்கானின் மகள் 14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தெரிவிப்பு!

நான் 14 வயதாக இருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அமீர்கானின் மகள் ஐரா கான் தெரிவித்துள்ளார். 


பிரபல இந்தி நடிகர் அமீர்கானுக்கும், முன்னாள் மனைவி ரீனா தத்தாவுக்கும் பிறந்த மகள் ஐரா கான். தற்போது 23 வயதாகும் ஐரா கான் இன்ஸ்டகிராமில் வீடியோ ஒறை வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், நான் 14 வயதாக இருந்தபோது பாலியல் தொல்லைக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அவர் எனக்கு தெரிந்தவராகவே இருந்தார். இருப்பினும் அது ஒவ்வொரு நாளும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் பிடித்தது.


நான் உடனடியாக என் பெற்றோருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதி அந்த சூழ்நிலையிலிருந்து என்னை வெளியேற்றினேன்.” தனது கடந்தகால அனுபவங்கள் தன்னை “பயமுறுத்தும்” ஒன்றல்ல என்று ஈரா மேலும் கூறினார். “நான் பயப்படவில்லை. இது எனக்கு இனி நடக்காது என்று உணர்ந்தேன், அது முடிந்துவிட்டது. நான் நகர்ந்து விட்டுவிட்டேன். ஆனால் அது மீண்டும் என்னை வாழ்க்கையில் வடுவைத்த ஒன்று அல்ல, என்னை உணரக்கூடிய ஒன்றும் அல்ல நான் 18-20 வயதில் இருந்தபோது உணர்ந்ததைப் போல மோசமாக இருந்தது, “என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் நான் சிறியவளாக இருந்தபோது, ​​என் பெற்றோர் விவாகரத்து பெற்றனர். அவர்கள் இணக்கமான முறையிலேயே விவாகரத்து செய்துகொண்டனர். அவர்கள் என்னையும் என் சகோதரனையும் அன்புடன் கவனித்துக்கொண்டனர் எங்கள் குடும்பம் உடைந்துவிடவில்லை என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *