தாய் மற்றும் 3 மாத சிசுவுக்கு கொரோனா!

மத்துகம- வலலாவிட்ட பிரதேசத்தில் 3 மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது முடக்கப்பட்டுள்ள வலலாவிட்ட- மாகலந்தாவ பிர​தேசத்தைச் சேர்ந்த சிசுவுக்கே கொரோனா தொற்றியுள்ளதென, வலலாவிட்ட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அத்துடன் அச்சிசுவின் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சிசுவும் தாயும் பொரலை ஐ.டி வைத்தியசாலைக்கு ​அனுப்பப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *