இலங்கை பாராளுமன்றம் மூடப்பட்டது!
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி மூடப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வைரஸ் ஒழிப்புக்கான தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே இவ்வாறு இரு நாட்கள் மூடப்படுகின்றன.
வழமைபோல் 28 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது