கொரோனா தொற்றாளி தப்பியோட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் கொஸ்கம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த தொற்றாளர் ஒருவர், இன்று காலை 6 மணிக்கு தப்பிச் சென்றுள்ளார்.
26 வயதுடைய இவர்,சேதுவத்த – வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர், இன்று அதிகாலை 1.30 மணியளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.