இலங்கையில் மேலும் ஐந்து கிராமங்கள் முடக்கம்!
களுத்துறை மாவட்டத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, அகலவத்த பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, தாபிலிகொட, வடக்கு கெகுலன்தர மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெல்லன கிராமங்களும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன