கொழும்பில் ஓட்டல் உரிமையாளருக்கு கொரோனா!

கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

(18) ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர் குறித்த ஹோட்டலின் உரிமையாளர் என தெரிவிக்கப்படும் நிலையில், அவர் அங்கு காசாளராக செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஹோட்டலில் நாள் தோறும் சுமார் 200 க்கும் அதிகமானோர் உணவு உண்பதற்காக வருபதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *